Powered by Blogger.
🌏World roaming Software Technology Evangelist. Proud Indian, Bought up from Coimbatore, Tamilnadu, INDIA. Pointing towards share of Knowledge. 😎
  • Programming ▼
    • DotNet
      • C# Coding Standards
    • Cloud
    • Microsoft 365/ SharePoint
    • SQL
    • Angular / ReactJS / NodeJS
    • Salesforce
    • Magento
    • Python
    • Mobile App Development
    • Database
    • DevOps
    • Automation Testing
    • User Experience
  • Learning ▼
    • Roadmap
    • Trainings
    • E-Books
    • Quick References
    • Certifications
    • Self Improvement
    • Productivity
    • TED Talks
    • Kids Programming
  • Software Engineering ▼
    • Agile
    • Software Design
    • Architecture Samples
    • Best Practises
    • Technologies and Tools
    • Open Sources
    • Free Softwares
  • Leadership ▼
    • Program Management
    • Product Management
    • Project Management
    • People Management
  • Job Search ▼
    • Interview Tips
    • Career Handbook
    • Resume Templates
    • Sample Profiles
    • Cover Letter Samples
    • HR Interview Questions
    • Job Websites List
    • Coding Site Links
    • TedEx Talks
    • International Jobs
  • Emerging Topics ▼
    • Innovation
    • Machine Learning
    • Artificial Intelligence
    • Generative AI
    • AI Tools
    • Big Data
    • Data Science
    • Data Analytics & Visualization
    • Cyber Security
    • Microsoft Azure
    • Amazon Web Services
    • Cryptography
    • ChatBots
    • Internet of Things (IoT)
    • Mixed Reality /AR/VR
  • Misc. ▼
    • Travel
    • Photography
    • Health Tips
    • Medical Tips
    • Home Designs
    • Gardening
  • Favourite Links ▼
    • Saran Kitchen Hut
    • World of Akshu
    • Saran & Akshu - Other Links

1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி

6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10.மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்

11.மாம்பழம்
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

13.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.


14.செர்ரி திராட்சை
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.
The Image and info from Ini oru vidhi seivom.

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=341390322632453&set=a.332083533563132.66659.297395707031915&type=1&ref=nf

Here are some things you can begin doing as soon as today to begin the great brain tune up.
1) Eat Almonds
Almond is believed to improve memory. If a combination of almond oil and milk is taken together before going to bed or after getting up at morning, it strengthens our memory power. Almond milk is prepared by crushing the almonds without the outer cover and adding water and sugar to it.

2) Drink Apple Juice
Research from the University of Massachusetts Lowell (UML) indicates that apple juice increases the production of the essential neurotransmitter acetylcholine in the brain, resulting in an increased memory power.

3) Sleep well
Research indicates that the long-term memory is consolidated during sleep by replaying the images of the experiences of the day. These repeated playbacks program the subconscious mind to store these images and other related information.

4) Enjoy simple Pleasures
Stress drains our brainpower. A stress-ridden mind consumes much of our memory resources to leave us with a feeble mind. Make a habit to engage yourself in few simple pleasures everyday to dissolve stress from your mind. Some of these simple pleasures are good for your mind, body and soul.
Enjoy music you love
Play with your children
Hug a stranger
Appreciate others
Run few miles a day, bike or swim
Start a blog
Take a yoga class or Total wellness routine

5) Fast for a day
Fasting cleans and detoxifies our body. It is known fact that heavy food not only causes stress on our digestive system but also drains our brainpower. Fasting relieves toxic emotions such as anger, grief, worry, and fears - before they accumulate and cause disease. By cleansing toxic emotions, fasting strengthens metal clarity with increases memory, concentration, creativity and insight.

6) Exercise your mind
Just as physical exercise is essential for a strong body, mental exercise is equally essential for a sharp and agile mind. Have you noticed that children have far superior brainpower than an adult does? Children have playful minds. A playful mind exhibits superior memory power. Engage in some of the activities that require your mind to remain active and playful.
Play scrabble or crossword puzzle
Volunteer
Interact with others
Start a new hobby such as blogging, reading, painting, bird watching
Learn new skill or a language

7) Practice Yoga or Meditation
Yoga or Meditation relives stress. Stress is a known memory buster. With less stress, lower blood pressure, slower respiration, slower metabolism, and released muscle tension follows. All of these factors contribute significantly towards increases in our brainpower.

8) Reduce Sugar intake
Sugar is a non-food. a form of carbohydrate that offers illusionary energy, only to cause a downhill slump once the initial burst has been worn off. Excess intake of sugar results in neurotic symptoms. Excess sugar is known to cause claustrophobia, memory loss and other neurotic disorders. Eat food without adding sugar. Stay away from sweet drinks or excess consumption of caffeine with sugar.

9) Eat whole wheat
The whole wheat germs contain lecithin. Lecithin helps ease the problem of the hardening of the arteries, which often impairs brain functioning.

10) Eat a light meal in the night
A heavy meal at night causes tossing and turning and a prolonged emotional stress while at sleep. It’s wise to eat heavy meal during the day when our body is in motion to consume the heavy in-take. Eating a light meal with some fruits allows us to sleep well. A good night sleep strengthens our brainpower.

11) Develop imagination
Greeks mastered the principle of imagination and association to memorize everything. This technique requires one to develop a vivid and colorful imagination that can be linked to a known object. If you involve all your senses - touching, feeling, smelling, hearing and seeing in the imagination process, you can remember greater details of the event.

12) Sex
Our sexual imagination often empowers our ability to daydream, which strengthens our brainpower with greater imagination, visualization and association.

13) Control your temper
Bleached food, excess of starch or excess of white bread can lead to nerve grating effect. This results in a violent and some time depressive behavior. Eat fresh vegetables. Drink lots of water and meditate or practice yoga to relieve these toxic emotions of temper and violent mood swings.

14) Take Vitamin B-complex
Vitamin B-complex strengthens memory power. Eat food and vegetables high in Vitamin B-complex. Stay away from the starch food or white bread, which depletes the Vitamin B-complex necessary for a healthy mind.

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=416381251785840&set=a.165224176901550.38425.165217980235503&type=1&ref=nf

  • கொய்யாப் பழத்தில் வைட்டமின்-சி, பி, கால்சியம், மாக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள் நிறைந்து இருக்கின்றன.
  • இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.
  • தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.
  • கொய்யாப் பழத்தைச் சாப்பிட விரும்பாத குழந்தைக ளுக்கு, கொய்யாப் பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதையை எடுத்து அரைத்து, அதனுடன் தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, தோசையாக வார்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
  • தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
  • சர்க்கரை நோயாளிக ளுக்குக் கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.
  • நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம்.
  • கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.
  • உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது.
  • ஆஸ்துமா, வாதநோய், மற்றும் 'எக்ஸிமா’ போன்ற சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள் கொய்யாவைச் சாப்பிடக் கூடாது.
  • கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.

Referred URL
https://www.facebook.com/photo.php?fbid=10151276308595418&set=a.10150292307745418.333467.697545417&type=1&ref=nf
பிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ -
சிறந்த மதிய உணவகம்
1- சந்திரன் மெஸ், தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி )
2- குமார் மெஸ், தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )
3- அம்மா மெஸ், தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )
4- அன்பகம் மெஸ்,வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )
5- அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )

மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி

சிறந்த மாலை நேர உணவகம்1- கோனார் மெஸ்,  சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு, மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )
2- குமார் மெஸ், தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )
3- ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)
4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால் கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )
5- சிங்கம் பரோட்டா கடை பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )

மற்ற சிறந்த மாலை உணவகங்கள்ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில் இட்லி கடை )

சிறந்த சைவ உணவகங்கள்
மதிய உணவு -
கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )

மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள் )

எந்நேரமும்சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )

இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -முருகன் இட்லி கடை, இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி... உலகின் மிகச்சிறந்த இட்லி )

மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை, டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )

சங்கர் காபி, அண்ணா பஸ் ஸ்டாண்ட்-
உழுந்த வடை
ஐயப்பா தோசை கடை, இடம் சொல்லத்தெரியவில்லை , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....

விசாலம் காபி- கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது

பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...பேமஸ் ஜிகர்தண்டா, விளக்குத்தூண்
ஜில்ஜில் ஜிகர்தண்டா.

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=518002358250098&set=a.442096905840644.114848.346727412044261&type=1

அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

கடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பவுடர் : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பவுடர் : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பவுடர் : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பவுடர் : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பவுடர்: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும்,

ஜாதிக்காய் பவுடர்: நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பவுடர்: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பவுடர்: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பவுடர்: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பவுடர்: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பவுடர்:கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பவுடர்: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பவுடர்: வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பவுடர்: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பவுடர்: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பவுடர்: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பவுடர்: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பவுடர்: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பவுடர்: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பவுடர்: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பவுடர்: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பவுடர்: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பவுடர்: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பவுடர்: ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பவுடர்: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பவுடர்: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

வாழைத்தண்டு பவுடர்: சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பவுடர்: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பவுடர்: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பவுடர்: பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.

சுக்கு பவுடர்: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பவுடர்: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பவுடர்: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பவுடர்: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பவுடர்: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பவுடர்: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பவுடர்: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பவுடர்: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பவுடர்: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பவுடர்: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பவுடர்: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பவுடர்: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பவுடர்: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.


கருவேலம்பட்டை பவுடர்: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்


நன்றி: நாவலன் தீவு வலைப்பூ

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=516985041685163&set=a.346737135376622.94281.346727412044261&type=1

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.


2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கல்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக...
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கல்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு..!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே...!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து....!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்....!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.

லப்... டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள்....
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி...!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு..!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்... கவனி... செல்...!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அரசே...! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

நீதி: தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்...!

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=412784218812210&set=a.165224176901550.38425.165217980235503&type=1&relevant_count=1&ref=nf

1) ''அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...''
''ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!''


2) ''ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது. ஆண்களுக்கு வளரலை?''
''பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.''


3) ''பலாத்காரம்னா என்னப்பா?''
''கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.''

4) ''மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு வாங்குறீங்க?''
''உச்சா எப்படி வருதோ, அதேபோல பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே கெட்ட ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.''

5) ''குழந்தை எப்படிப்பா பிறக்குது?''
''அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.''

மணாலி

நிறைய தம்பதியர்கள் திருமணம் முடிந்ததும், செல்ல நினைக்கும் ஒரு தேனிலவு இடம் என்றால் அது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி தான். ஏனெனில் இந்த இடத்தில் கண்களை கவரும் வகையில் அழகான பல இயற்கை காட்சிகள் உள்ளன. மேலும் இந்த இடம் மலைப் பிரதேசம் என்பதால், இது ரொமான்டிக் செய்வதற்கு ஏற்ற ஒரு இடம்.

கோவளம் கடற்கரை

கேரளாவில் உள்ள கோவளம் ஒரு சிறந்த சுற்றுலாத்தளம். இந்த தளத்தில் மூன்று பிறைவடிவ கடற்கரைகள் உள்ளன. அவை கலங்கரை விளக்கக் கடற்கரை, அவா கடற்கரை, சமுத்திரக் கடற்கரை என்பன. இந்த இடத்திற்கு காதலர் தினத்தின் போது வந்து, காதலர் தினத்தை துணையுடன் கொண்டாடினால் நன்றாக இருக்கும். மேலும் இந்த இடம் சூரியன் உதிப்பதையும், மறைவதையும் துணையுடன் கண்டு ரசிக்கும் படியாக அழகாக அமைந்துள்ளது.

ஜெய்சால்மர்

ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜெய்சால்மர் பெரும்பாலும் அரேபிய இரவுகள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் பழங்கால கோட்டைகளை காண்பதோடு, இந்த இடத்தில் பல வகையான நம்பமுடியாத வித்தியாசமான மற்றும் சுவையான உணவுகளை சுவைக்கலாம். எனவே இந்த இடத்திற்கு வந்தும் சற்று வித்தியாசமாக காதலர் வாரத்தைக் கொண்டாடலாம்.

கோவா

கோவா என்றாலே அனைவருக்கும் கடற்கரை தான் ஞாபகம் வரும். ஏனெனில் அந்த அளவு இந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் கடற்கரைகள் இருக்கும். இந்த இடத்திற்கு நிறைய பேர் சுற்றுலாவிற்கு வருவார்கள். இது காதலர்களுக்கு ஏற்ற ஒரு அருமையான இடம். இந்த இடத்திற்கு காதலர்கள் வந்தால், நன்கு மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதோடு, மனம் விட்டு பேசி, சூப்பராக ரொமான்ஸ் செய்யலாம்.

காஷ்மீர்

இந்தியாவில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர், பூமியில் உள்ள ஒரு சொர்க்கம் என்று சொல்லலாம். இந்த இடம் மிகவும் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, நிறைய தம்பதியர்கள் மற்றும் காதலர்கள் ரொமான்ஸ் செய்வதற்கு ஒரு சிறந்த இடம். எனவே உங்கள் காதலிக்கு ஒரு பரிசு வழங்க வேண்டுமென்று நினைத்தால், இந்த இடத்திற்கு அழைத்து செல்லலாம்.

கோகர்னா

இந்த அருமையான இடம் பெங்களூருவில் இருந்து 483 கி.மீ.க்கு வெளியே அமைந்துள்ளது. இந்த இடம் ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாக இருப்பதோடு, இங்கு பரபலமான பல கடற்கரைகள் உள்ளன. அவை மெயின் பீச், கூடுல் பீச், ஓம் பீச், அரை நிலவு கடற்கரை மற்றும் பாரடைஸ் அல்லது கோகர்னா கடற்கரை போன்றவை. எனவே இது காதலர்கள் நேரத்தை செலவழிக்கவும், ரொமான்ஸ் செய்வதற்கும் ஏற்ற இடமாக இருக்கும்.

ஷில்லாங்

இந்தியாவில் உள்ள ரொமான்ஸ் செய்வதற்கு இருக்கும் சிறந்த இடங்களுள் ஷில்லாங் போன்று எதுவும் இருக்காது. ஏனெனில் இந்த இடத்தில் உள்ள ஒரு அருமையான காட்சியான மேகங்கள் பனிகளால் மூடிப்பட்டிருப்பதை தெளிவாக காணலாம்.

சிம்லா

இந்த காதலர் தினம் சும்மா அசத்தலாக இருக்க வேண்டுமென்றால், குன்றுகளின் ராணி என்று அழைக்கப்படும் சிம்லாவிற்கு வரலாம். இது இமாச்சலப் பிரதேசத்தில், அமைந்துள்ள ஒரு சூப்பரான சுற்றுலாத்தளம்.

தேக்கடி

கோவா செல்வதற்கு திட்டம் போட்டிருந்தால், நிச்சயம் அப்போது தேக்கடியையும் பார்க்க வேண்டும். இங்கு அழகான காட்சிகள் இருப்பதோடு, சற்று வெதுவெதுப்பான காலநிலையுங்ட நிலவுவதால், ரொமான்ஸ் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=513704258679908&set=a.442096905840644.114848.346727412044261&type=1&relevant_count=1&ref=nf
பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
 
"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..
1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...
2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...
 
முதலுதவி:-
1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது
4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

 

ஏறத்தாழ 46 சதவிகிதத்துக்கும் மேலான குழந்தைகள் சவலையாகவும் சத்துக்குறைபாட்டுடனும் இருக்கும் இதே நாட்டில்தான், இன்னொரு பக்கம் பால் மாவு, வைட்டமின் மாத்திரைகள், புரதச்சத்து மாவு, கூடுதல் ஊட்ட உணவுகள் என வகை வகையாகக் கொடிகட்டிப் பறக்கிறது ஊட்டச் சத்து வணிகம்.


'ரொம்ப மெலிஞ்சிருக்கானே புள்ள; இந்தப் புரத உணவைக் கொடுங்க; தோசை மாவுலகூடக் கரைச்சி ஊற்றலாம்'' என்ற நேரடி வணிகரின் சிபாரிசு, ''ஜீரோ சைஸ் இடுப்புடன் அழகா இருக்கணுமா? பட்டினி கிடங்க; வேற எதுவும் சாப்பிடாம இந்த டிரிங்க்கை மட்டும் குடிங்க; அப்படித்தான் எங்க நாத்தனார் 30 கிலோ குறைஞ்சாங்க தெரியுமா?'' என்ற கதைகள்; சிக்ஸ்பேக் உடம்புக்கு அந்தப் புரத மாவைச் சாப்பிட்டே ஆக வேண்டும்!'' என்று உடற்பயிற்சி நிலையங்களில் சொல்லப்படும் பரிந்துரைகள் என டப்பா புரதச் சத்து உணவு வணிகம் இன்று மிகமிக அதிகம். ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் கிட்டத்தட்ட 2,50,300 கோடிக்கு தனது புரத மாவை விற்கிறது.


'இந்த அவசர உலகில் இதெல்லாம் அவசியம்தானே சார்?' என நீங்கள் கேட்கலாம். பெரும்பாலும் சோள மாவிலும் பால் புரதங்களிலும் வைட்டமினும் கனிமங்களும் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த ஊட்டப் பொருளைக் காட்டிலும் நம் வீட்டு உணவுகள் எவ்வளவோ மேல் என்பதுதான் எங்கள் ஆதங்கம். டப்பா உணவைக் காட்டிலும் வீட்டுப் பொங்கலிலோ, சத்து மாவுக் கஞ்சியிலோ இருந்து பெறப்படும் புரதம் முழுமையாக உட்கிரகிக்கப்படும் என்பது பல முறை உணவியலாளர்களால் மறுபடி மறுபடி சொல்லப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக நம் பாரம்பரிய உணவுகளான வெண்பொங்கல், சோள தோசை, உளுந்தங்களி, பாசிப்பயறு மாவு உருண்டை, சத்து மாவு என இவை எல்லாமே ஊட்டம் தரும் புரத உணவு கள்.


தோசையிலோ, களியிலோ அல்லது சத்து மாவிலோ வாசம் போகாமல் இருக்க ரசாயனம் சேர்ப்பது இல்லை. பிடித்த வெனிலா வாசம் வேண்டும்... சாக்லேட் வாசம் வேண்டும் என்று மணக் கூறுகளைச் சேர்ப்பது இல்லை. கெட்டுப்போகாமல் இருக்க ஆன்டிஆக்சிடென்ட்டுகள் சேர்ப்பது இல்லை. பொலபொலவென உதிர வேண்டும் என சிலிக்கான் ரசாயனங்கள் சேர்ப்பது இல்லை. நீர்த்துவம் வந்துவிடக் கூடாது என நீர் உரிஞ்சும் வாயுக்கள் அல்லது உணவைப் பாதுகாக்க இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக் முதலான ஏராளமான உறைகள் போடுவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு ஸ்பூன் உணவுக்கு ஒரு நாள் சம்பளப் பணம் போடுவது இல்லை. ஆனால், சந்தையில் வரும் ஊட்ட உணவில் இத்தனையும் உண்டு தோழரே!


நம் பாரம்பரிய உணவில் என்ன உள்ளது தெரியுமா? ஆறு மாதங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து, திட உணவுக்கு கைக்குழந்தை போகும்போது ''டப்பா உணவு தேவை இல்லை. குருணையரிசி; பாசிப் பருப்பு; தேங்காய் எண்ணெய் இரண்டு துளி சேர்த்து கூழாகக் காய்ச்சிக் கொடுங்கள்' என்று இன்றளவும் சொல்லி வருபவர்கள் நம் பாட்டிகள் மட்டுமல்ல... உலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும்தான். அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் ஹெச்.சி.எம். (High Calorie Meal).அதே குழந்தை சோறு சாப்பிட ஆரம்பிக்கும்போது பாசிப்பயறும் நெய்யும் மிளகும் சேர்த்து திணை அரிசியில் அல்லது சாமை அரிசியில் வெண்பொங்கல் தயாரித்துக் கொடுங்கள். அது அளிக்கும் புரதச் சத்து, இரும்புச் சத்து, மிளகின் சத்து ஆகியவை இணைந்து சுவாச மண்டல நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கும். முளைகட்டிய பாசிப்பயறும் கேழ்வரகும் மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி, வறுத்த உளுந்து, நிலக்கடலை, கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் சுக்கு சேர்த்து அரைத்துத் தயாரிக்கும் சத்து மாவுக் கஞ்சி வெறும் புரதம் மட்டும் தருவது இல்லை; இரும்பும் கால்சியமும் இன்னும் உடலின் பல வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான தாவர நுண் பொருளும் சேர்த்துத் தரும்.


மாதவிடாய் துவங்கிய பெண்ணுக்கு இடுப்பைப் பலப்படுத்தும் என்று தாய் மாமன் சீதனமாக தரும் உளுத்தங்களியின் புரதம் இடுப்பை மட்டுமல்ல, கருப்பையையும் வலுப்படுத்தும் என்ற பாரம்பரிய தமிழ் மருத்துவக் கருத்தை இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்திஉள்ளன. இப்படி வாழ்வின் ஒவ்வொரு நகர்வுக்கும் நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டி, சில நேரம் கலாசாரத்தில் கலந்து காட்டிச் சென்ற உணவைக் காட்டிலும் இந்த டப்பா உணவு பெரிதாக நன்மை செய்வது இல்லை. மாறாக, இப்படி ஊட்டத்தை உடனடியாக டப்பா உணவின் மூலம் தருவதில், உடல் கொஞ்சம் கொஞ்ச மாக சத்துக்களைக் கனியில் இருந்தும் தானியத்தில் இருந்தும் பிரித்து எடுப்பதை மறந்துவிடுகிறது. சர்க்கஸ் சிங்கம், ரப்பர் வளையத்துக்குள் போவதைப் போல, இதுபோன்ற ஊட்ட உணவு களின் ஆக்கிரமிப்புகள் உடலின் ஆர்ப்பரிக்கும் ஆற்றலை வேகமாக இழக்கச் செய்யும். நேரம் இல்லை என்ற ஒரே விஷயத்துக்காக எதிர்காலத்தை மருந்துக்கு அடகுவைப்பதைவிட, கொஞ்சம் மெனக்கெடுவதும் கொஞ்சம் மூளைச் சலவை செய்யும் விளம்பரத்தைவிட்டு விலகி, பாரம்பரியத்தை உற்றுப் பார்த்தால் உண்மை தெரியும் நண்பர்களே!


நன்றி -ஆறாம் திணை , விகடன் ,

உங்களுக்காக மருந்தில்லா மருத்துவம் இதோ:
வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக வேலையால் மூட்டுவலியால் கஷ்டப்டுபவரா?, கால் பாதங்களில் வலியா? கழுத்து பகுதியில் வலியா? ஜீரண சக்தியில் பிரச்சனையா? இதோ உங்களுக்காக எளிமையான யோகா மருத்துவம்:


வஜ்ராசனம்:
கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டவும். பின் வலது காலை மடக்கவும். பின் இடது காலையும் மடக்கி கொள்ள வேண்டும். மடக்கிய காலின் குதிகாலானது உடலின் பின்பகுதியை தொடுவது போல அமர வேண்டும். குதிகால்களை ஒரு இருக்கை போல அமைத்து உட்கார வேண்டும்.
வலது கையை வலது முட்டியிலும், இடது கையை இடது முட்டியிலும் வைக்க வேண்டும். முதுகு பகுதியை வளைக்காமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். சில வினாடிகள் உட்கார்ந்த பின் 5 முறை நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். பின் ஒவ்வொரு காலாக நீட்டி பழைய நிலைக்கு வரவேண்டும்.
இந்த யோகாவை தினமும் செய்தால், கால் பாதங்களில் வரும் வலி நீங்கி விடும். மூட்டு வலி ஓடிவிடும். ஜீரணசக்தி அதிகமாகும், கழுத்து வலி நீங்கி விடும்.
தினமும் செய்து பாருங்கள், பலனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Links -

http://blog.balabharathi.net/?page_id=25

http://www.newautism.com/blog/

Referred URL

http://www.ashokraja.me/post/Locating-custom-assemblies-built-for-SharePoint-2013-in-GAC.aspx

Locating custom assemblies in GAC is bit different for SharePoint 2013 when compared to SharePoint 2010. This difference is due to .net version on which these version of SharePoint are depending on. Although this is a very old topic for people who are working on Asp.net, I thought of sharing it for SharePoint folks who are struggling to find out what happened to their dll.

Location

After the release of .net 4.0, assemblies are classified into 2 segments and are deployed in 2 locations depending on their version of core. All assemblies built on .net versions up to 3.5 are deployed into “C:\Windows\assembly”. Assemblies that are built on .net 4.0 and above are deployed into “c:\windows\microsoft.net\assembly”.

Since SharePoint 2013 is based on .net 4.5, “c:\windows\microsoft.net\assembly” is the location we have to look for custom assemblies that are developed for SharePoint 2013 and deployed in GAC. In the said path, there are 3 folder named, “GAC_32”, “GAC_64” and “GAC_MSIL”. As the name suggests, 32 bit dlls are deployed into GAC_32 folder and 64 bit dlls are deployed into GAC_64 folder and the dlls that are built with “Any CPU” mode are deployed into “GAC_MSIL”

Deployment

The usual drag and drop into GAC folder does not work out for .net 4.0 and above assemblies. Assemblies has to be deployed through gacutil.exe which comes along with .net 4.0 framework. If you are copy pasting gacutil of .net 4.0 to a custom location for deployment, ensure that you also have gacutlrc.dll copied to that custom location.

Note: Check out this post to physically locate assemblies in GAC that are built on versions prior to 4.0

மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்


என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்க்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்


நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நல்ல எண்ணத்தில் (?) எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.


உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.
அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் நண்பர்களே மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.


ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை காரணம் பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை. கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம் என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த (Slim) தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.


மெனோபாஸ் துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.


தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகிறது. முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் (Walking) இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.


நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். தொப்பையை குறைப்பதற்கு என்று பார்த்தோமானால் மிகச் சிறந்த பலன் தரும் யோகாசனங்களாக தனுராசனம், சலபாசனம், சர்பாசனம், மற்றும் நல்காசனம் ஆகிய யோகாசனங்களை குறிப்பிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும். தொப்பை விழுந்த பின் கடும் முயற்சி செய்து அவற்றை குறைப்பதைக் காட்டிலும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி வரும்முன் தடுப்பதே சிறந்ததாகும்.

17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும்.

மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.
அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.
வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.
முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்
பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்

 

 

Newer Posts
Older Posts

Search this Site

Translate Articles

Total Posts

Total Pageviews


Contributors

My photo
Jay Srinivasan
Professional: I'm a Software Techie, Specialized in Microsoft technologies. Worked in CMM Level 5 organizations like EPAM, KPMG, Bosch, Honeywell, ValueLabs, Capgemini and HCL. I have done freelancing. My interests are Software Development, Graphics design and Photography.
Certifications: I hold PMP, SAFe 6, CSPO, CSM, Six Sigma Green Belt, Microsoft and CCNA Certifications.
Academic: All my schooling life was spent in Coimbatore and I have good friends for life. I completed my post graduate in computers(MCA). Plus a lot of self learning, inspirations and perspiration are the ingredients of the person what i am now.
Personal Life: I am a simple person and proud son of Coimbatore. I studied and grew up there. I lost my father at young age. My mom and wife are proud home-makers and greatest cook on earth. My kiddo in her junior school.
Finally: I am a film buff and like to travel a lot. I visited 3 countries - United States of America, Norway and United Kingdom. I believe in honesty after learning a lot of lessons the hard way around. I love to read books & articles, Definitely not journals. :)
View my complete profile

Certifications

Certifications

My Favorite Links

  • Saran & Akshu Links
  • Saran Kitchen Hut
  • World of Akshu
  • Ashok Raja Blog

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Contact Form

Name

Email *

Message *

Connect with Me

Blog Archive

  • ►  2025 (48)
    • ►  June (7)
    • ►  May (26)
    • ►  April (1)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (10)
  • ►  2024 (134)
    • ►  December (3)
    • ►  November (8)
    • ►  October (11)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (39)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (9)
    • ►  March (6)
    • ►  February (33)
    • ►  January (10)
  • ►  2023 (16)
    • ►  December (12)
    • ►  August (2)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2022 (14)
    • ►  December (1)
    • ►  August (6)
    • ►  July (3)
    • ►  June (2)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2021 (16)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (2)
    • ►  August (1)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2020 (36)
    • ►  December (1)
    • ►  November (15)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (4)
    • ►  March (2)
    • ►  February (6)
    • ►  January (2)
  • ►  2019 (14)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  March (2)
    • ►  January (1)
  • ►  2018 (61)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (4)
    • ►  August (5)
    • ►  July (4)
    • ►  June (4)
    • ►  May (7)
    • ►  April (7)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (17)
  • ►  2017 (55)
    • ►  December (1)
    • ►  November (7)
    • ►  October (7)
    • ►  September (8)
    • ►  July (4)
    • ►  June (7)
    • ►  May (4)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (10)
  • ►  2016 (45)
    • ►  December (1)
    • ►  November (5)
    • ►  October (2)
    • ►  September (7)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (5)
    • ►  March (3)
    • ►  February (3)
    • ►  January (9)
  • ►  2015 (88)
    • ►  December (5)
    • ►  November (2)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (3)
    • ►  July (6)
    • ►  June (7)
    • ►  May (12)
    • ►  April (6)
    • ►  March (11)
    • ►  February (10)
    • ►  January (14)
  • ►  2014 (159)
    • ►  December (16)
    • ►  November (13)
    • ►  October (42)
    • ►  September (12)
    • ►  August (19)
    • ►  July (3)
    • ►  June (17)
    • ►  May (10)
    • ►  April (12)
    • ►  March (7)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ▼  2013 (192)
    • ►  December (7)
    • ►  November (2)
    • ►  October (3)
    • ►  September (10)
    • ►  August (25)
    • ►  July (17)
    • ►  June (22)
    • ►  May (22)
    • ►  April (24)
    • ►  March (17)
    • ▼  February (22)
      • Fruits and Benefits
      • ‎14 simple ways to super-charge Your BRAIN
      • Heath benefits
      • கொய்யா! – Guava Benefits
      • மதுரை உணவகங்களின் தரப்பட்டியல்
      • மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்
      • What Stress does to your body
      • 100 மருத்துவ குறிப்புகள்
      • நீதிக்கதை
      • அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பத...
      • இந்தியாவில் உள்ள இடங்கள்!!!
      • "பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்
      • Indian Food Calorie Chart
      • Healthy Food Tips
      • 10 Steps to Self Care
      • வஜ்ராசனம்
      • Articles about Autism
      • Locating custom assemblies built for SharePoint 20...
      • தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்..!
      • A very helpful chart in understanding prepositions...
      • Health Benefits of Papaya
      • Vitamins. Foods and uses
    • ►  January (21)
  • ►  2012 (204)
    • ►  December (21)
    • ►  November (35)
    • ►  October (47)
    • ►  September (27)
    • ►  August (6)
    • ►  July (21)
    • ►  June (16)
    • ►  May (7)
    • ►  April (9)
    • ►  March (4)
    • ►  February (3)
    • ►  January (8)
  • ►  2011 (70)
    • ►  December (8)
    • ►  November (5)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (7)
    • ►  July (3)
    • ►  June (30)
    • ►  May (3)
    • ►  April (3)
    • ►  March (1)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (30)
    • ►  December (1)
    • ►  September (4)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (6)
    • ►  March (5)
    • ►  February (2)
    • ►  January (5)
  • ►  2009 (40)
    • ►  December (4)
    • ►  November (6)
    • ►  October (4)
    • ►  September (5)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  June (4)
    • ►  May (8)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2008 (6)
    • ►  December (1)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (1)
  • ►  2007 (7)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (1)
    • ►  July (1)
    • ►  May (2)

Recent Posts

Followers

Report Abuse

FOLLOW ME @INSTAGRAM

Popular Posts

  • Stay Wow - Health Tips from Sapna Vyas Patel
    Referred URL https://www.facebook.com/sapnavyaspatel WATCH WEIGHT LOSS VIDEO: http://www.youtube.com/ watch?v=S_dlkjwVItA ...
  • Calorie Count chart For food and drinks
    Referred URL http://deepthidigvijay.blogspot.co.uk/p/health-diet-calorie-charts.html http://www.nidokidos.org/threads/37834-Food-Calorie-...
  • SharePoint 2010 Interview Questions and Answers
    Referred URL http://www.enjoysharepoint.com/Articles/Details/sharepoint-2010-interview-questions-and-answers-148.aspx 1.What is SharePoint...
  • 150 Best Windows Applications Of Year 2010
    Referred URL : http://www.addictivetips.com/windows-tips/150-best-windows-applications-of-year-2010-editors-pick/?utm_source=feedburner...
  • Web Developer Checklist by Mads Kristensen
    Referred Link -  http://webdevchecklist.com/ Web Developer Checklist Get the extension  Chrome  |  Firefox  |  Edge Menu Bes...
  • WCF and REST Interview Questions
    What is WPF? The Windows Presentation Foundation (WPF) is a next generation graphics platform that is part of...
  • Remove double tap to unlock feature on samsung galaxy core2
    Double tap to unlock is a feature of Talkback, so if your will disable Talkback, double tap to unlock will also be disabled. To disable doub...
  • Difference Between Content Editor and Script Editor webpart
    Referred Link -  http://jeffas.com/content-editor-vs-script-editor-webpart/ Content editor web part is a place holder for creating rich ...
  • SPFolder related operations in SharePoint
      1) Get SPListItem(s) of a particular SPFolder SPList splist; SPFolder spfolder; //Get the required folder instance SPQuery spquery = new ...

Comments

Created with by BeautyTemplates | Distributed by blogger templates